தற்போது கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு, மக்களை
டிவி, செல்போன் மற்றும் இணையம் என்றும் தொழில்நுட்பத்தின் உள்ளே
ஆழமாகவே தள்ளியுள்ளது. மேலும் இணையத்தில் சமூக வலைதளங்களில் தான்
பலரும் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
அதன் படி, இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் அதிகம் டவுன்லோடு
செய்யப்பட்ட சமூக வலைதள செயலிகள் பட்டியலில் இந்த டிக்டாக் முதலிடத்தில்
உள்ளது. இதில் சுமார் 1 கோடியே 6.12 லட்சம் பேர் இந்த செயலியை டவுன்லோடு
செய்துள்ளனர் என்பதும். அடுத்ததாக, சுமார் 71 லட்சம் பேர் இன்ஸ்டாகிராம்
செயலியை டவுன்லோடு செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.மேலும் நான்காவது இடத்தில் பேஸ்புக் ஆனது உள்ளது. மேலும் சுமார் 47 லட்சம் பேர் இந்த செயலியை டவுன்லோடு செய்துள்ளனர். மேலும் ஐந்தாவது இடத்தில் ஹெலோ லைட் என்ற செயலியும், ஆறாவது இடத்தில் பேஸ்புக் லைட் என்ற செயலியும் உள்ளது. மேலும் ஹாகோ, ஸ்னாப்சாட், லாஅமோர், விமேட் ஸ்டேட்டஸ் ஆகிய பல செயலிகள் அடுத்தடுத்த இடங்களில் இடம்பிடித்துள்ளனர்.
எனவே ஒட்டுமொத்தமாக அனைத்து வகையிலான செயலிகள் பட்டியலைப் பார்க்கும் போது, ஆரோக்ய சேது என்ற செயலி ஆனது முதலிடத்தில் உள்ளது. இதை சுமார் 2 கோடி பேர் டவுன்லோடு செய்துள்ளனர் இந்த செயலி கொரோனா தொடர்பாக மத்திய அரசு இதை வெளியிட்டது.
மேலும் தற்போது இரண்டாவதாக லூடோ கிங் விளையாட்டு செயலி ஆனது உள்ளது. இதை சுமார் 1.5 கோடி பேர் டவுன்லோடு செய்துள்ளனர். வீடியோ கான்பிரன்சிங் என்ற செயலியான ஸூம், 1.5 கோடி டவுன்லோடுகளுடன் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஆகவே நான்காவது இடத்தில் உள்ள டிக்டாக், ஆனது ஐந்தாவது இடத்தில் கேரம் பூல், ஆறாவது இடத்தில் யு வீடியோ மற்றும் ஏழாவது இடத்தில் உள்ள கூகுள் பே செயலிகள் உள்ளன. மேலும் எட்டாவது இடத்தில் வாட்ஸ் அப், ஒன்பதாவது இடத்தில் இன்ஸ்டாகிராம், பத்தாவது இடத்தில் ஹெலோ செயலிகள் ஆனது உள்ளன.
இதில் பிப்ரவரி மாதத்தில் இந்த பட்டியலில் வாட்ஸப் ஆனது முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
எனவே டிக்டாக், ஹெலோ மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஒப்பீட்டளவில் ஊரடங்கு காலத்தில் டிக்டாக் மற்றும் ஹெலோ செயலிகளின் தான் அதிக டவுன்லோடு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
0 Comments